TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
பூமிக்குள்ளிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம்.. லடாக்கில் !! - லடாக்கில் 14 ஆயிரம் அடி உயரத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் வெற்றிகரமாக புவிவெப்பக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 1 மெகாவாட் மின்நிலையம் மூலம் வணிக ரீதியான மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கும். ஓஎன்ஜிசி நிறுவனம் லடாக்கில் தனது 2ஆவது புவிவெப்பக் கிணற்றை வெற்றிகரமாக தோண்டி முடித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த இடத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் புவிவெப்பக் கிணறு தோண்டப்பட்டுள்ளது. புவிவெப்ப...
மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்ஸ! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள் - மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்த காலத்தில் அரச பயங்கரவாதங்கள் பல வடிவங்களில் இன பேதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் அச்சம் காரணமாக அப்போது எவருமே வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சி பிரமுகர்களும் கடும் அச்சத்தினால் கட்டுண்டு கிடந்தனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சிலர் இப்போது திடீர் புரட்சியாளர்களாக மாறி அது குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். நீர்கொழும்பு...
வெப்ப அலையினால் ஜூன் மாத இறுதியில் மாத்திரம் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! - ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. உயழிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் யூரோமோமோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே...
சிவப்பு அறைக்குள்: 10 பெண்களுடன் 17 பேர் கைது - கிருபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின் முகாமையாளர்கள் இருவர் உட்பட மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முற்றுகை நடவடிக்கை கடந்த 5-ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, முதலாவது மசாஜ் நிலையத்திலிருந்து ஒரு பெண்...
அதிகாரியைக் கொல்ல முன் அவரது பிறப்புறுப்பு சிதைப்பு - நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையிலிருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெற்றபோது, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இக்கொடூரச் செயலைச் செய்த கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...
இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி...
காதலை சொல்ல தயங்கும் இளைஞனின் காதல் பயணமே `இதயம் முரளி’ இதயா (அதர்வா) மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மறுநாள் இதயாவுக்கு திருமணம் என்பதால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். விமானத்தில்...
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர். ஆந்திர மாநிலம்...