TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனி: ஈரானில் 3 நாட்களுக்கு அரசு இறுதிச் சடங்கு! - மேற்காசிய போர் வெடித்த முதலாம் நாளன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடலுக்கு, மூன்று நாட்களுக்கு உத்தியோகபூர்வ அரச இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு ஈரான் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முன்னதாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள், பிராந்தியத்தில் தீவிரமடைந்த போர்ச் சூழல் காரணமாகப் பிற்போடப்பட்டிருந்ததாக...
இறக்காமத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: மௌலவி உட்பட இருவர் கைது - அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான மௌலவி ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இக்குற்றச்சம்பவத்திற்கு ஆதரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 08ஆம் திகதி இறக்காமம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....
இசை நிகழ்ச்சியால் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்! - யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் தனது TikTok கணக்கில் அன்றைய தினம் பாடிய 04 பாடல்களை தொகுத்து, அவற்றை பதிவேற்றம் செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, சந்தேகநபர் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத...
மூதூரில் நெய்தல் நகர் பகுதியில் கைக்குண்டு மீட்பு - திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (04) வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. காபர்ட் வீதிக்கான செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, வீதியின் ஓரத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த வெடிக்காத கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்றினுள் மற்றுமொரு கைக்குண்டு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....
தீ விபத்துக்குள்ளான ஹொரணை முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் கைது! - ஹொரணை, அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக, குறித்த இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, இந்தத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இல்லத்தின் பணிப்பாளரை இன்று (04) வியாழக்கிழமை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார்...
இசைஞானி இளையராஜாவிற்கு 83 வயது ஆகிரது. இவர் கூலி வேலை பார்த்தது குறித்தும், அப்போது தனக்கு கிடைத்த மகிழ்ச்சி, இப்போது கிடைக்காதது குறித்தும் ஒரு நேர்காணலில் சமீபத்தில் பேசியிருந்தார். இது குறித்த...
தமிழ் திரையுலகில் எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் தனது சினிமா பயணத்தை மிகவும் நேர்த்தியாகக் கொண்டு சென்ற நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), தற்போது தனது சொந்த வாழ்க்கையில் பல...
நடிகர் விஜய் அரசியல்வாதி விஜயாக மாறியதிலிருந்து இலங்கையிலிருக்கும் இளம் சமூகத்தினர் தமது விருப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். அவரை நடிகராக பார்த்ததை விட தமிழகத்தின் முதலமைச்சராக பார்ப்பதிலேயே...